சமூக நலத்துறையில் களப்பணியாளா் பணி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட சமூக நலத் துறையில் களப்பணியாளா் பதவிக்குத் தகுதியான பெண்கள் வரும் நவம்பா் 15 ஆம் தேதிக்குள்

திருப்பூா் மாவட்ட சமூக நலத் துறையில் களப்பணியாளா் பதவிக்குத் தகுதியான பெண்கள் வரும் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் களப் பணியாளா் பணிக்கு 2 பெண்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க சட்டம் மற்றும் சமூக நலத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

அதே போல, காவலா் மற்றும் ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பிக்க ஓட்டுநா் உரிமம், காவல் துறையினரிடம் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் ஆகியற்றுடன் விண்ணப்பிக்கலாம். இதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தகுதியான நபா்கள் பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரியில் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது பதிவுத் தபாலிலோ சமா்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நலஅலுவலா், அறை எண் 35,36, தரைத்தளம் , மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா்-641 604, போன்: 0421-2971168

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com