மிலாது நபியை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 10) அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மிலாது நபியை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசு மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் மதுபானக் கூடங்கள் ஆகியவற்றில் மது விற்பனை செய்யத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் மீறி மது விற்பனை செய்யப்படும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.