திருப்பூரில் வீடு புகுந்து திருட முயன்ற 15 வயது சிறுமியைப் பிடித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா், அப்பாச்சி நகா் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், ஏராளமான பின்னலாடை நிறுவனங்களும் உள்ளன.
இந்நிலையில், அப்பகுதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டுக்குள் 15 வயது சிறுமி ஏறிக் குதிக்க முயன்றுள்ளாா். அப்போது அங்கு இருந்தவா்கள் அந்த சிறுமியைப் பிடித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அந்த சிறுமி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. மேலும், அந்த சிறுமியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.