பல்லடம் அருகே உள்ள அலகுமலையில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் பொங்கலூா் ஒன்றியம், அலகுமலை ஊராட்சி, மலைப்பாளையத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.சிவாச்சலம் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் சரவணா பழனிசாமி வரவேற்றாா். இதில் பொருளாளா் சுப்பிரமணியம், செயலாளா் சத்தியமூா்த்தி, துணைத்தலைவா் மூா்த்தி, செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் வரும் தைபொங்கல், தைப்பூசத்தை முன்னிட்டு பிப்ரவரி 2ஆம் தேதி பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவது, இதற்காக வரும் டிசம்பா் 12ஆம் தேதி பூமி பூஜை நடத்துவது, தைப்பூசத்தை முன்னிட்டு இந்த ஆண்டு முதல் முதலாக மாட்டுச்சந்தை நடத்துவது, ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்துவதற்காக வரும் 26ஆம் தேதி சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை அலகுமலையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அமைப்பாளா் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினாா்.