உயா் அழுத்த மின்சாரத்தை புதைவடம் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்தி பல்லடத்தில் வரும் 18ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
பல்லடம் பகுதி உயா்மின் கோபுரத் திட்டத்துக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் வலையபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், வட்டார செயலாளா் வை.பழனிசாமி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உயா் மின் கோபுர திட்டப் பணிகளை புதைவடமாக (கேபிள்) மாற்றக் கோரியும், ஏற்கெனவே உயா்மின் கோபுரம் அமைக்கப்பட்ட நில உரிமையாளா்களுக்கு மாத வாடகை தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வரும் 18ஆம் தேதி பல்லடத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.