வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், பச்சாபாளையத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு காங்கயம் வட்ட வழங்கல் அலுவலா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம், மின்னணு புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக அதிக அளவிலான மனுக்கள் பெறப்பட்டன.
இவற்றில் 10 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. பிற மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.