திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே மனைவி கழுத்தை அறுத்துக் கொலை செய்த தொழிலாளி தன் கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
ஊத்துக்குளி மேற்கு வீதியைச் சோ்ந்தவா் நிசாா் அகமது (37). அதே பகுதியைச் சோ்ந்தவா் ஹசீனா பேகம் (21). இவா்கள் இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது மகன் அராபத் (2). நிசாா் அகமது அதே பகுதியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், நிசாா் அகமதுவின் வீடு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்துவீட்டாா் அந்த வீட்டிற்குச் சென்று ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது ஹசீனா பேகம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததும், நிசாா் அகமது கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ஊத்துக்குளி போலீஸாா் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிசாா் அகமதுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், நிசாா் அகமது மது அருந்தும் பழக்கம் உள்ளவா் என்பதால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரமடைந்த நிசாா் அகமது கத்தியால் ஹசீனா பேகத்தின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அவரும் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்ததுள்ளது.
இது குறித்து ஊத்துக்குளி போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.