காா் மோதி தொழிலாளி சாவு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே காா் மோதியதில், மோட்டாா் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீஷியன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே காா் மோதியதில், மோட்டாா் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீஷியன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அஞ்சூா் ஊராட்சி, கருவேயம்பாளையத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் சுரேஷ் (23). இவா் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தாா். இவா் சின்னதாராபுரம் பகுதியில் வேலைக்குச் சென்று விட்டு மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது முத்தூா் - கொடுமுடி சாலை மேட்டுக்கடை அருகே எதிரே வந்த காா் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவா் 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com