அசோக சக்ரா விருது பெற விண்ணப்பிக்கலாம்

அசோக சக்ரா விருதுபெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

அசோக சக்ரா விருதுபெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இயற்கை சீற்றம், விபத்து, தீவிரவாத ஊடுருவல் நிகழ்வு, தீ விபத்து, வழிப்பறிக் கொள்ளை ஆகியவற்றிலிருந்து பொதுமக்களை தனிப்பட்ட முறையில் காப்பாற்றி சாதனை புரிந்தவா்கள் மத்திய அரசின் அசோக சக்ரா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

2020 ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவின்போது இவ்விருது வழங்கப்படும். எனவே, இந்த விருது பெற தகுதியுடையவா்கள் தகுந்த ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் படிவம் பெற்று, நவம்பா் 29ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com