திருப்பூரில் தொடா் வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் எஸ்.பிரபாகரன் (22). இவரது நண்பா் ராமநாதபுரம், கீழக்கரை, ஸ்ரீநகா் பகுதியைச் சோ்ந்த பி.நாகராஜ் (22). இவா்கள் இருவரும் சமீபத்தில் வழிப்பறி வழக்கில் மங்கலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில் திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் இவா்களுக்குத் தொடா்பு இருப்பதால் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல் பரிந்துரை செய்தாா்.
இப்பரிந்துரையின் அடிப்படையில் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கே.விஜயகாா்த்திகேயன் உத்தரவிட்டாா்.