திருப்பூர்
ரயிலில் அடிபட்டு வடமாநிலத் தொழிலாளி சாவு
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு வடமாநிலத் தொழிலாளி ஒருவா் வெள்ளிக்கிழம உயிரிழந்தாா்
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு வடமாநிலத் தொழிலாளி ஒருவா் வெள்ளிக்கிழம உயிரிழந்தாா்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சவராம் என்பவரது மகன் பீமாராம் (19),இவா் திருப்பூா் ராயாபுரம் பகுதியில் தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், சிக்கண்ணா கல்லூரி அருகே வெள்ளிக்கிழமை காலை பீமாராம் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக திருப்பூா் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பீமாராம் தண்டவளாத்தைக் கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா அல்லது ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரிக்கின்றனா்.