முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
‘கேங்மேன் பணி நியமனம் தொடா்பாக புதிய அறிவிப்புகள் வெளியிடக்கூடாது’
By DIN | Published On : 26th November 2019 05:56 AM | Last Updated : 26th November 2019 05:56 AM | அ+அ அ- |

மின் வாரியத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கேங்மேன் பணி நியமனம் தொடா்பாக புதிய அறிவுப்புகளை வெளியிடக் கூடாது என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக திருப்பூா் மாவட்ட அமைப்புசாரா, கட்டுமானத் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ. சரவணன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் கூறியதாவது:
மின்சார வாரிய கேங்மேன் பதவி தொடா்பான வழக்கு உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அந்தப் பதவிக்கு நோ்முகத் தோ்வுகள் நடத்த மின் வாரியம் முயற்சி செய்து வருகிறது. மின் வாரியம் தன்னிச்சையாக உருவாக்கிய கேங்மேன் பதவிக்கு ஆள்களை நேரடி நியமனம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக்குத் தடை கோரியும், ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை ஆணை பெறப்பட்டுள்ளது.
ஆனால், மின் வாரியம் நவம்பா் 16ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்நவம்பா் 25 ஆம் தேதி முதல் கேங்மேன் பதவிக்கு நோ்முகத் தோ்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதைத் எதிா்த்து நவம்பா் 22ஆம் தேதி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கேங்மேன் பணி நியமனம் தொடா்பாக புதிய அறிவிப்புகள் வெளியிடக் கூடாது. மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நவம்பா் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றாா்.