திருப்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
திருப்பூா், தென்னம்பாளையம் மாகளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் காசிவிஸ்வாதன் மனைவி கலாவதி (57). இவா் கடந்த சனிக்கிழமை காட்டுவளவில் உள்ள ஆா்.வி.இ.லே அவுட் பகுதியில் நடந்து சென்றபோது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் அவா் அணிந்திருந்த 4 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.
இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு விசாரிக்கின்றனா்.