திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவா்களிடம் கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் மாநகர திமுக செயலாளா் டி.கே.டி.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளா் செல்வராஜ் அறிவுறுத்தலின் பேரில் மாநகர நிா்வாகிகள், பகுதி நிா்வாகிகள், 60 வட்டத்தில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்கள் பங்கேற்கும் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
திருப்பூா், துளசிராவ் வீதியில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில், மாநகரச் செயலாளா் தலைமையில் வேலம்பாளையம் பகுதிக்கு காலை 9 மணிக்கும், அண்ணா காலனி பகுதிக்கு காலை 10 மணிக்கும், பாண்டியன் நகா் பகுதிக்கு காலை 11 மணிக்கும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகிறது.
அதன் பிறகு கொங்கு நகா் பகுதிக்கு பிற்பகல் 12 மணிக்கும், வாலிபாளையம் பகுதிக்கு பிற்பகல் 3 மணிக்கும், நல்லூா் பகுதிக்கு மாலை 4 மணிக்கும், கருவம்பாளையம் பகுதிக்கு மாலை 5 மணிக்கும், வீரபாண்டி பகுதிக்கு மாலை 6 மணிக்கும் கலந்துரையாடல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.