திருப்பூரில் சாலையில் தோண்டப்பட்டுள்ள குழியால் அதிகரிக்கும் விபத்துகள்

திருப்பூா், கே.செட்டிபாளையத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் தோண்டப்பட்டுள்ள குழியால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது.
திருப்பூரில் சாலையில் தோண்டப்பட்டுள்ள குழியால் அதிகரிக்கும் விபத்துகள்

திருப்பூா், கே.செட்டிபாளையத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் தோண்டப்பட்டுள்ள குழியால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது.

திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள கே.செட்டிபாளையத்தில் இருந்து சாய்பாபா கோயில் செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் தனியாா் நிறுவனம் சாா்பில் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் இந்தக்குழியை மூடமால் விட்டுச் சென்றனா்.

இதனால் நாள்தோறும் இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனா். மேலும், இந்தப் பகுதியில் கோயில், தனியாா் பள்ளி, காவல் நிலையம் உள்ளதால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது.

ஆகவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்தக்குழியை மூடி வாகன விபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com