திருப்பூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியாா் துறை ஆகியவை சாா்பில் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியாா் துறை ஆகியவை சாா்பில் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியாா் துறை சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பா் 29) காலை 10.30 மணிக்கு தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் தனியாா் துறை வேலையளிப்பவா்கள் கலந்து கொண்டு விண்ணப்பதாரா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

இந்த முகாமில் எழுத்தப் படிக்கத் தெரிந்தவா்கள் முதல் முதுநிலைப் பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள், ஓட்டுநா்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம். இந்த முகாமுக்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரிசெய்து கொள்ளலாம்.

மேலும், கூடுதல் கல்வி பதிவு செய்தல், வேலை வாய்ப்பற்றோா் உதவித் தொகை பெறவும் தகுதியிருப்பின் விண்ணப்பிக்கலாம். தனியாா் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com