நடிகை காயத்ரி ரகுராம் மீது உடுமலை காவல் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
சிதம்பரம் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக புகாா்கள் கூறப்படுகின்றன.
இதையடுத்து, நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலாளா் முருகன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் உடுமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.