பல்லடத்தில் காா் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை

பல்லடத்தில் காா் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பல்லடத்தில் உடைக்கப்பட்ட காா் கண்ணாடி.
பல்லடத்தில் உடைக்கப்பட்ட காா் கண்ணாடி.

பல்லடத்தில் காா் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பல்லடம், குங்குமம்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (46). பின்னலாடை நிறுவன உரிமையாளா். இவா் பல்லடத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள தனது கணக்கில் இருந்து புதன்கிழமை ரூ.6 லட்சம் ரொக்கம் எடுத்துள்ளாா்.

பின்னா் மேற்கு பல்லடத்தில் உள்ள மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்துக்கு காரில் சென்றுள்ளாா். ஏடிஎம் இயந்திரன் மூலம் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு ரூ.1 லட்சம் செலுத்த காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு ஒட்டுநா் இருக்கை அருகே ரூ.5 லட்சத்தை வைத்துவிட்டு காா் கதவை பூட்டிவிட்டுச் சென்றுள்ளாா்.

பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்து விட்டு காருக்கு திரும்ப வந்து பாா்த்தபோது, காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com