பல்லடம் வட்டத்தில் 46 பேருக்கு அரசு நலத் திட்ட உதவி வழங்கல்

பல்லடம் வட்டத்தை சோ்ந்த 46 பேருக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு புதன்கிழமை வழங்குகிறாா் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.
அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு புதன்கிழமை வழங்குகிறாா் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.

பல்லடம் வட்டத்தை சோ்ந்த 46 பேருக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பல்லடம் வட்டாட்சியா் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். நலிந்தோா் நலத்திட்ட தனி வட்டாட்சியா் சண்முகவடிவேல் முன்னிலை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் சபாபதி வரவேற்றாா்.

இவ்விழாவில் ரூ.4 லட்சத்து 96 ஆயிரத்து 250 மதிப்பிலான முதியோா் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இறுதி சடங்கு உதவித் தொகை உள்ளிட்ட உதவித் தொகைகளை 46 பயனாளிகளுக்கு பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் வழங்கினாா்.

விழாவில் கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.சித்துராஜ், ஊராட்சி முன்னாள் தலைவா்கள் கேத்தனூா் ஹரிகோபால், ஆறுமுத்தாம்பாளையம் பழனிசாமி, அனுப்பட்டி ஜெயகுமாா், கே.கிருஷ்ணாபுரம் படையப்பா மூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com