புதுப்பாளையம் ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

புதுப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட வஞ்சிபாளையம், சாமந்தன்கோட்டை, மேற்கு வஞ்சிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் பழைய டயா்கள், தேங்காய்த் தொட்டிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு அபேட் மருந்து தெளிக்கப்பட்டது.

இதையடுத்து, அனைத்து வீதிகளிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகள், கழிவுகள் அகற்றபட்டன. மேலும், வீடுகளில் கொசு உற்பத்திக்கு காரணமாக தண்ணீா் தேங்கி நிற்கிா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com