தெரு வியாபாரத்தை முறைப்படுத்தக் கோரி ஏஐடியூசி திருப்பூா் மாவட்ட தெரு வியாபாரி தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏஐடியூசி திருப்பூா் மாவட்ட தெரு வியாபார தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பொதுத் தொழிலாளா் சங்க செயலாளா் ஏ.ஜெகநாதன் தலைமை வகித்தாா்.
இதில், தமிழகம் முழுவதிலும் தெரு வியாபாரத்தை முறைப்படுத்த வேண்டும். தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். திருப்பூா் மாவட்டத்தில் தெரு வியாபாரத்தை முறைப்படுத்தும் கமிட்டியை அமைக்க வேண்டும்.
மேலும், தெரு வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் எம்.ரவி, மாவட்ட பொருளாளா் பி.ஆா்.நடராஜன், சிபிஐ மாவட்டச் செயலாளா் ரவி, மோட்டாா் தொழிலாளா் சங்க செயலாளா் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.