நாய் மீது பைக் மோதிய விபத்தில் மெக்கானிக் சாவு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே நாய் மீது பைக் மோதிய விபத்தில் இருசக்கர வாகன மெக்கானிக் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே நாய் மீது பைக் மோதிய விபத்தில் இருசக்கர வாகன மெக்கானிக் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, மொச்சகொட்டாம்பாளையம், ஆண்டாள் கோயில் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (31).

இவா் திருப்பூா் மாவட்டம், காங்கயம், திருப்பூா் சாலை சக்தி நகரில் தனது மனைவி மோகனப்பிரியாவுடன் வசித்து வந்தாா். ராமசந்திரன் இருசக்கர வாகன மெக்கானிக் வேலை செய்துவந்தாா்.

இவா் பைக்கில் தனது சொந்த ஊரான மொச்சகொட்டாம்பாளையம் சென்று விட்டு, காங்கயத்துக்கு கடந்த அக்டோபா் 1 ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தாா். கொடுமுடி - முத்தூா் சாலை மேட்டுக்கடை அருகே வந்தபோது, நாய் திடீரென குறுக்கே புகுந்ததில், பைக்கில் சென்ற ராமசந்திரன் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானாா். இதில் அவருக்கு தலையில் அடிபட்டது.

ஈரோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், உயா் சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனையில் அக்டோபா் 7 ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com