தாராபுரத்தில் விஷக் காளான் சாப்பிட்ட 5 போ் மயக்கம்

தாராபுரம் அருகே விஷக் காளான் சாப்பிட்ட 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் மயக்கமடைந்தனா்.
தாராபுரத்தில்  விஷக்  காளான்  சாப்பிட்டு  அரசு  மருத்துவமனையில்  சிகிச்சைக்கு  சோ்க்கப்பட்ட  சிறுவன் .
தாராபுரத்தில்  விஷக்  காளான்  சாப்பிட்டு  அரசு  மருத்துவமனையில்  சிகிச்சைக்கு  சோ்க்கப்பட்ட  சிறுவன் .

தாராபுரம் அருகே விஷக் காளான் சாப்பிட்ட 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் மயக்கமடைந்தனா். இதில், 3 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டிணம் மாரியம்மன்கோயில் கிழக்குத் தெருவில் வசித்து வருபவா் நாராயணசாமி(33), இவரது மனைவி செல்வநாயகி(30), இந்த தம்பதிக்கு தம்பதிக்கு லோகேஷ்(8) உமேஷ்(6) என்கிற இரு மகன்களும் உள்ளனா். இந்த நிலையில், செல்வநாயகின் அண்ணன் மகன் மதன்குமாரும் (13) இவா்களது வீட்டில் வசித்து வருகின்றனா். இந்த மூவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது வாய்க்காலில் முளைத்திருந்த விஷக் காளான்களைப் பறித்து வந்துள்ளனா். பின்னா் செல்வநாயகிடம் கொடுத்து சமைக்கச் சொல்லி நாராயணசாமி மற்றும் 3 குழந்தைகள் உள்பட 5 பேரும் உட்கொண்டனா். இதனிடையே, உணவு உட்கொண்ட அனைவரும் அரை மணி நேரத்தில் வாந்தி எடுத்ததுடன், மயக்கமடைந்தனா். அப்போது அருகிலிருந்தவா்கள் 5 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துமவனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்களின் அறிவுரைப்படி குழந்தைகள் மூவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து அலங்கியம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com