அவிநாசி பகுதியில் பெய்த கனமழை காரணமாக ராயன்கோயில் பகுதியில் 200ஆண்டு பழமை வாய்ந்த மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.
வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து அவிநாசி பகுதியில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை அவிநாசியில் 49 மி.மீ. அளவு மழை பொழிவு பதிவாகியிருந்தது. கன மழையால் அவிநாசி அருகே ராயன்கோயில் பகுதியில் இருந்த 200 ஆண்டு பழமை வாய்ந்த இரு ஆலமரங்களில் ஒரு மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.