பல்லடத்தில் இலவசமாக மதுபானம் தர வலியுறுத்தி பாட்டிலால் உடலில் கீறிக்கொண்ட இளைஞரை போலீஸார் மீட்டு அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சேர்த்தனர்.
பல்லடம், செட்டிபாளையம் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மேற்கு பல்லடத்தைச் சேர்ந்த மூர்த்தி (35), தன்னிடம் பணம் இல்லாததால் இலவசமாக மதுபானம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மதுபானம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த காலி மதுபாட்டிலை உடைத்து தனது உடலில் கீறிக்கொண்டு, மதுபானம் தராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டல் விடுத்தார்.
அங்கு வந்த பல்லடம் போலீஸார் மூர்த்தியை சமாதானப்படுத்தி, அரசு மருத்துமனையில் அவரை சேர்த்தனர்.