அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி,  அவிநாசியில் பனியன் நிறுவன தொழிலாளியிடம் மோசடி செய்தவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி,  அவிநாசியில் பனியன் நிறுவன தொழிலாளியிடம் மோசடி செய்தவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சேலம், சிவநாதபுரம், முத்துநாயக்கர் காலனியைச் சேர்ந்தவர் முருகன் மகன் நீலமேகம் (31). இவர்,  மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றதாக கூறப்படும், "பீப்பிள் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா', "பாரத் சேவக் சமாஜ்'  ஆகிய அமைப்புகளின் தென்னிந்திய துணைத் தலைவர் பொறுப்பில் உள்ளார். 
இந்நிலையில் இவர்,  தனது நண்பர் செந்தில்குமாருடன் திங்கள்கிழமை இரவு காரில் அவிநாசி அருகே தெக்கலூர் வந்து தேநீர் அருந்தியுள்ளார். 
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல்,  நீலமேகத்தை மட்டும் அவரது காரில் வைத்து கடத்திச் சென்றுள்ளது. 
இதையடுத்து நண்பர் செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில், நீலமேகத்தின் செல்லிடப்பேசி எண்ணை வைத்து அவிநாசி போலீஸார் விசாரணை மேற்கொண்டதில்,  அவரது கார், ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதையறிந்த கடத்தல் கும்பல்  விஜயமங்கலம் அருகே சென்றவுடன்,  நீலமேகம் அணிந்திருந்த தங்கச் சங்கலி, பணம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு அவரையும், அவரது காரையும் விட்டுத் தப்பிச் சென்றது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தப்பட்ட நீலமேகம், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவன நிர்வாகி எனக் கூறி போலியாக, மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. 
இதில் அவிநாசி அருகே பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் கிருபாகரன் (23) என்பவரிடம், தான் மத்திய அரசுப் பணியாளர் எனவும், மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அதற்காக ரூ.1 லட்சம் பெறுவதற்காக வந்தபோது நீலமேகம் கடத்தப்பட்டது தெரியவந்தது. 
மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தற்காக அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீலமேகத்தைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com