திருப்பூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 19th September 2019 08:32 AM | Last Updated : 19th September 2019 08:32 AM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை (செப்.20) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில், தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளைத் தேர்வு செய்ய உள்ளனர். எனவே, வேலை தேடும் நபர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
இதில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். மேலும், தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.