அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டம்

உடுமலை வட்ட அரசு ஊழியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் உடுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உடுமலை வட்ட அரசு ஊழியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் உடுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  இதற்கு தலைவர் தா.வைரமுத்து தலைமை வகித்தார். ஆர்.ஜெகதீஸ்வரன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் தி.திலீப் துவக்க உரையாற்றினார். இதில் செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தஞ்சையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு உடுமலை வட்டத்தில் இருந்து 150 பேர் செல்வது, செப்டம்பர் 24 இல் திருப்பூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பொருளாளர் எம்.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com