செப்டம்பர் 24 மின் தடை

முதலிபாளையம், நல்லூர், பழவஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள்

முதலிபாளையம்
முதலிபாளையம், நல்லூர், பழவஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (செப்.24) காலை 9 மணி முதல் மதியம் 2 வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் அறிவித்துள்ளார்.
முதலிபாளையம்: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன்நகர், ஆர்.வி.இ.நகர், கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார்பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர் மற்றும் செவந்தாம்பாளையம்.
நல்லூர்: நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு. 
பழவஞ்சிபாளையம்: செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜி நகர், ஐயப்பா நகர்.

பெதப்பம்பட்டியில்...
உடுமலையை அடுத்துள்ள ஆலாமரத்தூர் துணை மின் நிலையத்துக்கு  உள்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 24ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் அ.செந்தில்வேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
ஆலாமரத்தூர் துணை மின்நிலையத்தில் செப்டம்பர் 24ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. 
அதுசமயம் பெதப்பம்பட்டி, சோமவாரபட்டி, ருத்ரப்ப நகர், லிங்கமநாயக்கன்புதூர், கொங்கல்நகரம், கொங்கல்நகரம்புதூர், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதூர், மூலனூர், விருகல்பட்டிபுதூர், விருகல்பட்டி பழையூர், அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதூர், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனூர், ஆலாமரத்தூர், இலுப்பநகரம், அணிக்கடவு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com