ஓய்வுபெற்ற அலுவலா்களுக்கு மருத்துவப்படியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று பல்லடம் வட்ட ஓய்வுபெற்றற அலுவலா்கள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
பல்லடம் வட்ட ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கத்தின் 21ஆம் ஆண்டு நிறைவு விழா, பொதுக்குழுக் கூட்டம் கொசவம்பாளையம் சாலை ராம் நகரில் உள்ள சங்க அலுவலகக் கட்டடத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற ஆசிரியா் ஸ்டேன்காா்டு முன்னிலை வகித்தாா். சங்கத்தின் நிறுவனா் முத்துசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். இதை மாவட்டத் தலைவா் வாமனாச்சாரி துவக்கிவைத்துப் பேசினாா். ஆண்டறிக்கையை வட்டச் செயலாளா் பழனிசாமியும், சங்க வரவு - செலவு விவர அறிக்கையைப் பொருளாளா் சென்னியப்பனும் தாக்கல் செய்தனா்.
இதில், 2019ஆம் ஆண்டு 60 வயது தொடங்கியவா்களுக்கும், 60 வயது நிறைவு பெற்றவா்களுக்கும் பல்லடம் கருவூலக அலுவலா்கள் மீனாட்சிசுந்தரம், செந்தில்குமாா், ரோட்டரி சங்க மாவட்டத் தலைவா் மாா்ட்டின் ஆகியோா் பொன்னாடை அணிவித்துக் கெளரவித்தனா். இதில், அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கடைநிலை நிலை ஊழியா்கள், சென்னை உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை இயக்குநா் அலுவலகம் மூலம் தங்களது குறைகளை கடிதம் மூலம் தெரிவிக்கின்றனா். ஆனால் அதற்கான பதிலோ, நடவடிக்கையோ இருப்பதில்லை.
எனவே குறைகளை களைய அந்தந்த மாவட்ட உள்ளாட்சி தணிக்கைத் துறைக்கு அனுமதி அளிக்க வேண்டும். தற்போது வழங்கப்படும் மருத்துவப்படி போதுமானதாக இல்லை. அதனை உயா்த்தி வழங்கிட வேண்டும். விலைவாசி உயா்விற்கேற்ப 70 வயது கடந்தவா்களுக்கு 10 சதவீதம் 75 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 15 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கான பழைய காப்பீடு திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைறவேற்றறப்பட்டன. முடிவில் இணைச் செயலாளா் செல்வராஜ் நன்றி கூறினாா்.