இருசக்கர வாகனம் திருட்டு

 வெள்ளக்கோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டியில் கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 வெள்ளக்கோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டியில் கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாசவநாயக்கன்பட்டி - தாராபுரம் சாலையில் தையல் கடை வைத்திருப்பவர் மணி (50). கடையின் அருகே இவர் வீடு உள்ளது. இந்நிலையில் மணி வெள்ளிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தை கடை முன் நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com