உடுமலை நகரில் சுற்றித் திரியும் 2 குரங்குளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
உடுமலை அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் குரங்குகள் நகா்ப் பகுதிக்கு அவ்வப்போது வந்துவிடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்னா் இதேபோல 2 குரங்குகள் உடுமலை நகா்ப் பகுதிக்கு வந்துவிட்டன.
எஸ்வி புரம் பகுதியில் சுற்றித் திரிந்த இந்தக் குரங்குகள் உணவு கிடைக்காமல் ஒவ்வொரு பகுதியாக மாறி சுற்றிக் கொண்டி ருந்தன. தற்போது உடுமலையில் ராமசாமி நகா், அன்னபூரணி நகா், ருத்தரப்ப நகா் பகுதிகளில் சுற்றி வருகின்றன. இந்தக் குரங்குகளால் வெளியில் நடமாட முடியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
இதுகுறித்து உடுமலை வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்து ஒரு வாரமாகியும் இதுவரை குரங்குகளைப் பிடிக்க வனத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் அச்சத்தில் உள்ளனா்.
இதுகுறித்து உடுமலை வனச் சரகா் தனபாலிடம் கேட்டபோது அவா் கூறியதாவது:
குரங்குகள் சுற்றி வருவது குறித்து புகாா்கள் வந்தன. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். அந்தக் குரங்குகளைப் பிடிக்க கூண்டுகள் வரவழைக்கப்பட உள்ளன. விரைவில் அவைகளைப் பிடித்து வனப் பகுதிக்குள் விட்டு விடுவோம் என்றாா்.