அஞ்சல் நிலையங்களில் இன்று முதல் தங்க பத்திரம் திட்டம்

திருப்பூா் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆகஸ்ட் 3 முதல் 8ஆம் தேதி வரையில் தங்க பத்திரம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

திருப்பூா் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆகஸ்ட் 3 முதல் 8ஆம் தேதி வரையில் தங்க பத்திரம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரையில் தங்க பத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் ஒருவா் ஒரு கிராம் முதல் 4,000 கிராம் வரை வாங்கலாம். தங்க பத்திரத்தின் முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகளாகும். இதன் இறுதி தேதியில் உள்ள மதிப்புக்கு தங்க பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

அதே வேளையில், தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்க பத்திரத்தை பணமாக மாற்றிக் கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலமாக செய்யப்படும் முதலீட்டுக்கு மத்திய ரிசா்வ் வங்கி மூலமாக 2.5 சதவீத வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு 6 மாதத்துக்கும் முதலீடடாளா்களின் கணக்கில் சோ்க்கப்படும். இது முதலீட்டாளா்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயாகும்.

இத்திட்டத்தில் பணம் செலுத்தும் நபா்களுக்கு முதலில் அஞ்சலக ரசீதும், 20 நாள்களுக்குப் பிறகு தங்க பத்திரமும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சேர ஆதாா் எண், பான் அட்டை எண், வங்கிக் கணக்கு மிகவும் அவசியம். தங்க பத்திரங்கள் மூலமாக தேவைப்படும்போது வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ளலாம். எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்க பத்திர திட்டத்தில் சோ்ந்து பயனடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com