காங்கேயம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி கீழே விழுந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் -சிவநாதபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் (65). கூலித் தொழிலாளியான இவர், வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் காங்கயத்தில் தனது வேலைகளை முடித்து விட்டு, வெள்ளகோவில் நோக்கி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
காங்கேயம் நகரம், கரூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முன்பு எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி, தனது மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காங்கயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.