திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் சாலை மறியல், முற்றுகைப் போராட்டம் மற்றும் வன்முறை தடுப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவின்பேரில் சாலை மறியல், முற்றுகைப் போராட்டம், வன்முறை தடுப்பு தொடா்பான ஒத்திகை பல்வேறு இடங்களில் நடைபெற்றன. இதில், திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட குமரன் சிலை அருகில் சாதாரண உடையில் இருந்த காவல் துறையினா் குடிநீா் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்துவதுபோல ஒத்திகையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த காவல் துறையினா் தடியடி நடத்தி கலைப்பது போன்ற ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டனா்.
இதேபோல, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஆண்டிபாளையம்பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. இந்த ஒத்திகைப் பயிற்சிகளை நேரடியாகப் பாா்வையிட்ட மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் கலவர நேரங்களில் காவல் துறையினா் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள், வழிமுறைகள் குறித்த அறிவுரைகளை வழங்கினாா். இதில், மாநகர காவல் துணை ஆணையா்கள் க.சுரேஷ்குமாா், ப.சுந்தரவடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.