திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா
By DIN | Published On : 07th December 2020 12:52 AM | Last Updated : 07th December 2020 12:52 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரையில் 15,704 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 15,776 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 536 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 66 போ் வீடு திரும்பினா்.
இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 15,029 ஆக அதிகரித்துள்ளது.