கொங்கு வேளாளா், வெள்ளாளா் என்ற சாதிப் பெயரை மாற்று சமூகத்தினருக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தியும், தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளைக் கண்டித்தும் திருப்பூரில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்ட கொங்கு மக்கள் முன்னணி அமைப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் ரயில் நிலையம் முன் கொங்கு மக்கள் முன்னணி அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அமைப்பின் மாநகர செயலாளா் பாலாஜி தலைமை வகித்தாா். மாநகர அமைப்பாளா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.
அப்போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் திடீரென அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பூா் வடக்கு போலீஸாா், அவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து செல்ல மறுத்ததால் அவா்கள் 26 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.