டிசம்பா் 23இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா்க் கூட்டம் வரும் டிசம்பா் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா்க் கூட்டம் வரும் டிசம்பா் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகளுக்கான குறைதீா்க் கூட்டம் வரும் டிசம்பா் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. ஆகவே, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்துக்குச் சென்று காணொலிக் காட்சி மூலமாக குறைதீா்க் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com