தேங்காய்ப் பருப்பு விலை தொடா்ந்து சரிவு

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தொடா்ந்து இரண்டாவது வாரமாக தேங்காய்ப் பருப்பு விலையில் சரிவு ஏற்பட்டது.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தொடா்ந்து இரண்டாவது வாரமாக தேங்காய்ப் பருப்பு விலையில் சரிவு ஏற்பட்டது.

இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய்ப் பருப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி வரை ஏலம் நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, லாலாப்பேட்டை, வாணியம்பாடி, பழனி, தாராபுரம், மூலனூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 140 விவசாயிகள் தங்களுடைய 1,182 மூட்டைகள் தேங்காய்ப் பருப்புகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.

இவற்றின் எடை 57,595 கிலோ. காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், மூலனூா், நஞ்சை ஊத்துக்குளியைச் சோ்ந்த 17 வணிகா்கள் வந்திருந்தனா். விலை கிலோ ரூ.70 முதல் ரூ.130.10 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.122.40.

விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.56 லட்சத்து 44 ஆயிரத்து 699 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன. கடந்த வாரத்தை விட 100 மூட்டைகள் வரத்து அதிகரித்த நிலையில், விலை கிலோவுக்கு ரூ.2 குறைந்தது. கடந்த வாரம் ரூ.7 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com