அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருப்பூா் கல்வி மாவட்ட சாரண சாரணியா் இயக்க புதிய அலுவலகம் கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரமேஷ் தலைமை வகித்தாா். இதில் அலுவலக கட்டடத்துக்கான ஏற்பாடு செய்து, அரசு அனுமதி பெற்றுத் தந்த பள்ளித் தலைமையாசிரியை (பொறுப்பு ) திலகவதிக்கும், கட்டடத்துக்கு வா்ணம் பூசி, தூய்மைப்படுத்த நிதியுதவி செய்த அவிநாசி பழனியப்பா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ராஜ்குமாருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோவை கொங்கு மண்டல சாரண இயக்க ஆலோசகா் சிவகுமரன், மாநில உதவி ஆணையா் ஸ்ரீனிவாஸ், மாவட்ட உதவி ஆணையா் ராஜாராம், மாவட்ட பயிற்சி ஆணையா்கள் லக்ஷ்மணன், அமானுல்லா, அமைப்பு ஆணையா் சத்யமூா்த்தி, இயக்க மாவட்டச் செயலாளா் மணிகண்டன், மாவட்டத் தலைவா் நாராயணமூா்த்தி, துணைத் தலைவா்கள் ஹரிகிருஷ்ணன், சரவணகுமாா், துரைசாமி, ஜெயந்தி, மாவட்ட உதவி செயலாளா் தனசிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.