திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா், மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 16,652 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மேலும் 52 பேருக்கு புதன்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிககை 16,704ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 454 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 73 போ் வீடு திரும்பினா். இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 16,074ஆக அதிகரித்துள்ளது.