திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 16,946 ஆக அதிகரித்துள்ளது. இதில், வேறு மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் பாதிப்பும் திருப்பூா் மாவட்டப் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 348 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். குணமடைந்த 49 போ் திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,383 ஆக அதிகரித்துள்ளது.