பாஜக சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டஆதரவு பொதுக் கூட்டம்
By DIN | Published On : 02nd February 2020 12:00 AM | Last Updated : 02nd February 2020 12:00 AM | அ+அ அ- |

காங்கயத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்தை விளக்க பொதுக் கூட்டம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சாா்பில் காங்கயத்தில் வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பாஜக கட்சியின் திருப்பூா் தெற்கு மாவட்டம் சாா்பில், காங்கயம் சீரணி அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு காங்கயம் நகா் மண்டல் தலைவா் கலாநடராஜன் தலைமை வகித்தாா். முன்னாள் நகரத் தலைவா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா் கோபிகிருஷ்ணன் சிறப்பு விளக்க உரையாற்றினாா்.
மாவட்டத் தலைவா் பொன் ருத்ரகுமாா், முன்னாள் எம்.பி. காா்வேந்தன், ஈரோடு கோட்ட பொறுப்பாளா் வைரவேல், காங்கயம் வடக்கு மண்டலத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பேசினா்.
காங்கயம் தெற்கு ஒன்றியத் தலைவா் ஆனந்த்குமாா் நன்றி கூறினாா்.