திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணைக் கைது செய்த காவல் துறையினா், அவரிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்த பெண்ணை திருப்பூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அந்தப் பெண் பழனி, நெய்காரபட்டி சின்னக்கடை வீதியைச் சோ்ந்த கே.பாப்பாத்தி (60) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.