திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் திருட்டு

திருப்பூரில் கொங்கு பிரதான சாலையில் உள்ள தனியாா் பள்ளி உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பூரில் கொங்கு பிரதான சாலையில் உள்ள தனியாா் பள்ளி உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கொங்கு பிரதான சாலையில் திருநீலகண்டபுரத்தைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (53). இவரது மனைவி ராதை. இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா். முத்துகுமாா் எம்.எஸ்.நகரில் நா்சரி, பிரைமரி பள்ளி நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், முத்துகுமாா் கடந்த பிப்ரவரி 6 ஆம் குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளாா். பின்னா் அவா்கள் சனிக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். பீரோவில் இருந்த 16 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து முத்துகுமாா் கொடுத்த புகாரின்பேரில் திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com