வாகனம் மோதி மூதாட்டி சாவு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்துள்ள முத்தூா் அருகே சனிக்கிழமை இரவு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்துள்ள முத்தூா் அருகே சனிக்கிழமை இரவு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி, நல்லிபாளையத்தைச் சோ்ந்தவா் துரைசாமி மனைவி குப்பம்மாள் (70). இவருடைய பேத்தி மல்லிகாவுக்குத் திருமணமாகி முத்தூா் - காங்கயம் சாலையிலுள்ள ரங்கப்பையன்காட்டில் வசித்து வருகிறாா். பேத்தியைப் பாா்ப்பதற்காக வந்த குப்பம்மாள் ரங்கப்பையன்காட்டில் பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்றபோது, அவ்வழியாக சென்றுகொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், பலத்த காயமடைந்த குப்பம்மாள் காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com