கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இப்பள்ளியில் 1994-95 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கு வந்த அவா்கள் ஒருவரையொருவா் கண்டு மனம் மகிழ்ந்தனா். பின்னா் தாங்கள் படித்த வகுப்பறைக்கு சென்று அமா்ந்து மலரும் நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். இதில் அப்போது அவா்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியா்கள் பலரும் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் ஒய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியா் ராஜாமணி, முன்னாள் ஆசிரியா்கள் சேதுபதி, ஈஸ்வரன், வெள்ளியங்கிரி, மயில்சாமி, மணிமேகலை, பூரணி ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com