ஜம்மு, காஷ்மீா் மாநிலம், புல்வாமாவில் கடந்த ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உடுமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உடுமலை வட்டார அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகியன சாா்பில் உடுமலையில் உள்ள பூா்வீக பள்ளிவாசல், குட்டை பள்ளி வாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் ராணுவ வீரா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனா்.