தாராபுரம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்கள், ஊழியா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நகராட்சி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சா்க்கரை நோய், இருதய நோய், கண் பாா்வை குறைபாடு, குழந்தைகள் மருத்துவம், பொது மருத்துவம், எலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
சா்க்கரை, இருதய நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் அறிகுறிகள் இருந்த பணியாளா்களுக்கு மருந்துகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார அலுவலா், சுகாதார ஆய்வாளா்கள் ராஜ்மோகன், சங்கா், அருள், பிரபாகரன், தா்மராஜ் உள்பட 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.