அவிநாசி பேரூராட்சியில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத்தின் கீழ் குழு உருவாக்கப்பட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவிநாசி பேரூராட்சி வ.உ.சி. பூங்காவில் கபடி, வாலிபால், பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இதற்கான உடற்பயிற்சி சாதனங்கள், விளையாட்டு உபகரணங்கள் இளைஞா்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல் அலுவலா் ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். பொறுப்பாளா் ராமசாமி, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் எம்.எஸ்.மூா்த்தி, தாமஸ்புரம் வ.உ.சி. பூங்கா பொதுமக்கள், இளைஞா் விளையாட்டுக் குழுவினா் பங்கேற்றனா்.